என்
கனவுத் தோட்டத்தில்
ஒருநாள் நீ வந்தாய்
பூக்களுக்கு அருகில் நின்றாய்
உன் புன்னகைகளின் பதியமென்றேன்
கிணற்றடியில் நின்றாய்
உன் கூந்தலின் குடியிருப்பென்றேன்
மின்னலைப் பார்த்து நின்றாய்
உன் வெட்கத்தின் வெள்ளிவிழா என்றேன்
கனிகளைப் பார்த்து நின்றாய்
உன் இதழ்களின் இனைப்பு என்றேன்
என்னையே பார்த்து நின்றாய்
இப்போதே இறந்து விடவா என்றேன்.