திருச்சி தில்லை நகர் இரண்டாவது குறுக்குத்தெரு எஸ்.ஆர்.டி. ஹாலில் 25.6.2016 அன்று நடைபெற்ற தேசிய பணத்தாள் & நாணய கண்காட்சியில் ...
Monday 22 August 2016
ஷேர் ஆட்டோவில் டிவி
லேப்டாப்பை டாப்ல செட் பண்ணி தான் ஓட்ற ஷேர் ஆட்டோவில பயணிகளுக்கு டிவி எபெக்ட் கொடுக்கிற இந்த தம்பி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தான்.
" ஆமாந் தம்பி , லேப் டாப்பு தலைகீழாத் தொங்குது , படம் நேராத் தெரியுது எப்பிடி ? "
' சார் , ஸ்கிரீன் செட்டிங்க்ல போய் ரொட்டேட் கொடுத்தேன் ..'
# பெரம்பலூர் பெருமிதம்
கடந்த 7.8.16 அன்று மயிலாடுதுறையில் தொடங்கி 12.8.16 ஆத்தூரில் நிறைவடைந்த தோழர். கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான திராவிடர் விடுதலை கழகத்தின் " அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம் " மேற்கொள்ளும் தோழர்கள் 11.8.16 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கும் , பழைய பேருந்து நிலையத்தில் இரவு 7 மணிக்கும் பிரச்சாரம் செய்தனர்.
அதுசமயம் தோழர். தாமோதரன் உள்ளிட்ட இருபது பேர் நிறைந்த தோழர்களை சந்தித்து பரப்புரைப் பயணத்திற்கு த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா , இ. தாஹீர் பாட்ஷா , ப. செல்வகுமார் ஆகியோர் நிதியுதவி அளித்தப் போது....
Tuesday 9 August 2016
கந்தர்வக்கோட்டை த.மு.எ.க.ச 9.7.16 அன்று கிளைக் கூட்டத்தை நடத்தியது.
அதில் புலியூர் முருகேசன் அவர்களின் " உடல் ஆயுதம் " நாவலை கோ.கலியமூர்த்தியும் , எனது " ஒரு மழை வந்து போகவேண்டும் " கவிதை நூலை கவிஞர்.இராஜேந்திரன் அவர்களும் நூல் விமர்சனம் செய்தனர்.
கவிஞர்.தணிக்கொடி , வே.தமிழரசு , நரேந்திரன், உத்தம்சிங் , இராமநாதன் , மதியழகன் , மிடறு முருகதாஸ் , அண்டனூர் சுரா , மணிகண்டன் , முத்துக்குமார் ..என ஆளுமைகளால் நிறைந்திருந்தது கூட்டம்.
கலந்துக்கொள்கிற எல்லோருமே படைப்பாளிகளாய் , கவிதை வாசிப்பு , உரை என பங்கேற்கிற சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.
மாவட்டப் பொருளாளர் Stalin Saravanan ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்விற்கு கோவி.ஆறுமுகம் தலைமையேற்க , செயலாளர் கே.பாக்யராஜ் வரவேற்புறையாற்ற பொருளாளர் பாரதிராஜா நன்றியுரையாற்றினார்.
விமர்சனத்தை விட ஒரு படைப்பாளிக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
# கந்தர்வக்கோட்டைக்கு நன்றி
Subscribe to:
Posts (Atom)