Tuesday 9 August 2016


கந்தர்வக்கோட்டை த.மு.எ.க.ச 9.7.16 அன்று கிளைக் கூட்டத்தை நடத்தியது.
அதில் புலியூர் முருகேசன் அவர்களின் " உடல் ஆயுதம் " நாவலை கோ.கலியமூர்த்தியும் , எனது " ஒரு மழை வந்து போகவேண்டும் " கவிதை நூலை கவிஞர்.இராஜேந்திரன் அவர்களும் நூல் விமர்சனம் செய்தனர்.
கவிஞர்.தணிக்கொடி , வே.தமிழரசு , நரேந்திரன், உத்தம்சிங் , இராமநாதன் , மதியழகன் , மிடறு முருகதாஸ் , அண்டனூர் சுரா , மணிகண்டன் , முத்துக்குமார் ..என ஆளுமைகளால் நிறைந்திருந்தது கூட்டம்.
கலந்துக்கொள்கிற எல்லோருமே படைப்பாளிகளாய் , கவிதை வாசிப்பு , உரை என பங்கேற்கிற சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.
மாவட்டப் பொருளாளர் Stalin Saravanan ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்விற்கு கோவி.ஆறுமுகம் தலைமையேற்க , செயலாளர் கே.பாக்யராஜ் வரவேற்புறையாற்ற பொருளாளர் பாரதிராஜா நன்றியுரையாற்றினார்.
விமர்சனத்தை விட ஒரு படைப்பாளிக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.
# கந்தர்வக்கோட்டைக்கு நன்றி


















No comments:

Post a Comment