Tuesday 30 April 2013

          உலக புத்தக தின விழா 

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட மைய நூலகத்தில் 27.04.2013 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ‘உலக புத்தக தின விழா’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையேற்கவும், சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா. தமிழ்செல்வன் முன்னிலை வகிக்கவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா.காமராசு சிறப்புரை ஆற்றினார்.


இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவியர்க்கு உலக புத்தக தின விழாவினை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.



இவ்விழாவில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் , பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்



மாவட்ட நூலக வாசகர் வட்டத் துனைத் தலைவர் என்ற வகையில் நானும் பேசிட வாய்ப்பளிக்கப்ப்ட்டேன்.


மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் பொன்னாடைப் போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். 


கடந்த 2010 ல் நூலத்தில் ரூபாய் 1000 கொடுத்து புரவலராக இனைத்துக் கொண்டதற்கான பட்டயமும் அவ்விழாவில் வழங்கப்பட்டது.


புத்தகம் தனிமனிதனை பண்படுத்துகிறது                                                                      நூலகம் சமூகத்தை கட்டமைக்கிறது .





No comments:

Post a Comment