Friday 26 April 2013



வாடகை வீடு 

பத்துவயது மகன் கேட்டான்
“அப்பா நான் எந்த வீட்டில் பொறந்தேன்?”
அது … வந்து…
பதிலை முடிக்கும் முன்பே
கடைக்குட்டியும் கேட்டுவிட்டாள்
“அப்பா நானு?...”
மெளணத்தால் விக்கித்து
மனைவியின் முகம் தேடினேன்
“எப்பங்க சொந்த வீடு கட்டுறது?“
வாடகை ஏற்றத்தால்
வருடத்திற்கொருமுறை
மாறிக்கொண்டேயிருக்கிற வீடுகளில்
பதிலிறுக்க முடியாத கேள்விகளோடு
நிராசையாகின்றன
சொந்த வீடு பற்றிய கனவுகள்
                                

No comments:

Post a Comment