Friday 10 May 2013



சமாதானங்களின் கோடித்துணி

·         ரத்தம் வடியும் 
காயங்களை விட
வலியுண்டாக்குகிறது
நீ
சொல்லும் விளக்கங்கள்

·         உன் 
சமாதானங்களின் கோடித்துணிகளால் 
மறைக்க முடியவில்லை
என் பிணத்தின் கால்களை

·         மறுதலிப்பின் பிதற்றல்களுக்குள்ளே
ஒளிந்திருக்கிறது
உனது
ஒப்பங்களின் சாட்சியம்

·         புன்னகை மாறாமல்
நடந்து செல்கிறாய்
எங்கள் பிணங்களின் மேலே

·         ஒன்று சேரவே முடியாதா ?
என் வலிகளும்
உன் உணர்வுகளும்

No comments:

Post a Comment