Saturday 4 May 2013

திரைக்கடலின் கடற்கரையில்.....

இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் ( IDRC ) சார்பாக பேராசிரியர்.பெரியார்தாசன் அவர்கள் நெறியாள்கையில் “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? என்னும் 90 நிமிட ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் அவரோடு நடிப்பதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘கீரிப்புள்ள’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய பெரோஸ்கான் அவர்களது வீட்டில் தான் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படம்தான் இது......

Photo: நானும் எனது ஆசிரியர்களும்....

அப்படத்தின் திரையீட்டு விழா சென்னை வாஹினி ஸ்டூடியோவில் 24.04.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது அந்த ஆவணப்படத்தின் கருத்தியலை உள்ளடக்கிய “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ?” என்ற பேராசிரியர். பெரியார்தாசன் அவர்கள் எழுதிய  நூலை இயக்குனர். அமீர் வெளியிட்டார். நூலின் ஒரு பிரதியை நானும் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்டதுதான் இது......

Photo: சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்!  
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் ! 
 
இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் சார்பில் பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணப்படதிரையீட்டு நிகழ்சி  நேற்று 24.3.13 மாலை வடபழனி RKV ஸ்டுடியோ வில்   நடை பெற்றது ! சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தில் பெரியார் குறித்த இதுவரை வெளிவராத பல அறிய தகவல்கள் வெளி வந்துள்ளன. திரையீட்டு நிகழ்சியில்  கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் , திரைத் துறையினர் , பெரியார் இயக்க தோழர்கள், தலித் இயக்க தோழர்கள் , இஸ்லாமிய இயக்க தலைவர்கள், சமுதாய ஆர்வலர்கள்  அனைவரும் IDRC இன் இந்த முயற்சியை வியந்து பாராட்டினர்.    
 
புரபசனல் கூரியர் அஹமது மீரான் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கிஸ் கான் வரவேற்புரை ஆற்ற , இயக்குனர் சிபிச்சந்தர் ,இயக்குனர் அமீர் , பேராசிரியர். செல்வராஜ் , ஆகியோர் வாழ்த்துரை வழங்க இறுதியாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்!   IDRC செயலாளர் இப்ராகிம் காசிம் நன்றி உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணம் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது !  

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய IDRC துணைத் தலைவர் செங்கிஸ் கான் 'இஸ்லாத்திற்கு ஆதரவாக இவ்வளவு பேசிய பெரியாரை இஸ்லாமிய சமுதாயம் சரியான முறையில் அணுகவில்லை பயன் படுத்தவில்லை எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக பெரியார்தாசன் அப்துல்லாஹ்   அவர்களையாவது சரியான தளத்திலே பயன்படுத்த வேண்டும் எனும் தாவா நோக்கில் எடுக்கப்பட்டது தான் இந்த ஆவணப்பட முயற்சி !  ஏன் எனில் இங்கே பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அமைப்போ தலைவர்களோ இல்லை எனும் போது      50 ஆண்டுள் அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடையும் ! எனவே இந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சி  இன்ஷா அல்லாஹ தமிழகத்தின் அனைத்து பெரு நகரங்களிலும் மேலும்   வெளிநாடுகளிலும் வெளியிட உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம் ! என்று கூறினார்.

கீழே இருப்பது அப்படத்தின் இயக்குனர்.சிபிசந்தர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது......
இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா எதிர்த்தாரா எனும் தலைப்பில் நான் இயக்கிய ஆவணப்படத்தில் அய்யா பெரியார் தாசன் அவர்களை கேள்விகள் கேட்கும் பொறுப்பை ஏற்று அதை வெகு நேர்த்தியாக செய்த பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வெளியீட்டின் போது ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்ததோடு இன விடுதலைக்கான போராட்ட களத்திற்கு ஒரு தளபதியையும் அடையாளப்படுத்தியது  - இயக்குனர் சிபிசந்தர்

Photo: நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை 
ஒட்டு மொத்த என் கிராமமும் வர வேண்டும் !

 பெரியார் ஆவணப்படத்தில்   ' நாங்க தச்ச செருப்பை அவங்க போடுறாங்க எங்களப் போடக் கூடாதுன்னு சொல்ராங்களே! எங்க எருமை மாடு ஊர்க்குளத்துல குளிக்குது நாங்க குளிக்கக் கூடாது என்கிறார்களே' என உணர்வோடு உயிரோட்டமாக நடித்த பேராசிரியர்  செல்வகுமார் அவர்கள் அந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்சியில் பேசும் போது  'பெரம்பலூர் மாவட்டத்தின் பெயர் தெரியாத கிராமத்தில் இருந்த என்னை இந்த ஆவணப்படம் என்னை பெயர் அறிய செய்தது. அய்யாவின் கை பிடித்து அறிவு சாலை சென்றேன் ! இன்றைக்கும் அய்யா பெரியார் தாசனின் [அப்துல்லாஹ்வின் ] கை பிடித்து இந்த மேடை ஏறி வந்துள்ளேன் !   இன்றைக்கு நான் இந்த ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பெரியார் பரிந்துரைத்த  இஸ்லாத்தை உள்வாங்கி   இருக்கிறேன்! ஆனால் நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை! எனது ஒட்டு மொத்த கிராமத்துக்கும் இந்த கருத்துக்களை எடுத்து சொல்லி   பெரியார் சொன்ன இடத்துக்கு இஸ்லாத்துக்கு வர வேண்டும் அதுவே என் விருப்பம்  ! ஏன் எனில் இது என் போன்ற தனி மனிதனின் பிரச்னை இல்லை இது சமுகம் சார்ந்த பிரச்னை என்றார். அல்ஹம்து லில்லாஹ்! இறைவன் அவரின் உள்ளத்தை இஸ்லாத்தின் பால் திருப்பட்டும்!

அந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காணொளியை ( Trailer ) கீழ்கண்ட இணையதள முகவரியில் காணலாம்.......
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9nq8AQSmdiw

படப்பிடிப்பு இடைவேளையில் ... க்ளிக்கியது.. இது....





No comments:

Post a Comment