ஆசிரியர் தின செய்தி - 1 :
தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கணினி ஆசிரியராக அன்றைக்குத்தான் பணியில் சேர்கிறேன். அது 2001 வருடம். பணியில் சேர்ந்த முதல் நாள்.
ஆசிரியர்கள் அறையில் இருந்த எனக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு.
“ ஆறாம் க்ளாஸ் டீச்சர் வரலை நீங்க போறீங்களா..? “
‘ சரிங்க சார்..’
முதல் பாட வேளை. வகுப்புக்குள் நுழைகிறேன்.
“ வணக்கம் அய்யா..”
‘ வணக்கம் எல்லோரும் உட்காருங்க..’
எல்லோரும் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். 45 மாணவர்கள் இருக்கும்.
”முதல்நாள் எல்லார் பேரையும் கேட்டாலும் நினைவில் நிக்காது..
அதனால நான் கேள்வி கேக்கிறேன் பதில் சொல்லுங்க...”
‘ சரிங்க சார்...’
“ தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்...? “
‘ ............’
“ சரி இன்னோரு கேள்வி கேக்குறேன்..
கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சது யாரு ? ”
‘...........’
“ சரி பரவாயில்லை.. உங்களுக்கு தெரியாத கேள்வி நான் கேட்ட மாதிரி எனக்குத் பதில் தெரியாத கேள்வி நீங்க யாராவது கேளுங்க பார்ப்போம்...”
‘...........’ சிறிது அமைதிக்குப் பின், ஒரு மாணவன் எழுந்தான்.
“ தம்மம்பட்டியில் ஓடுற ஆறு பேரு என்னா சார்..? “
‘......ஙே......’
அன்றைக்கு தோற்க தொடங்கினேன். மாணவர்களிடம்.
* இன்றைக்கும் தான்
தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கணினி ஆசிரியராக அன்றைக்குத்தான் பணியில் சேர்கிறேன். அது 2001 வருடம். பணியில் சேர்ந்த முதல் நாள்.
ஆசிரியர்கள் அறையில் இருந்த எனக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு.
“ ஆறாம் க்ளாஸ் டீச்சர் வரலை நீங்க போறீங்களா..? “
‘ சரிங்க சார்..’
முதல் பாட வேளை. வகுப்புக்குள் நுழைகிறேன்.
“ வணக்கம் அய்யா..”
‘ வணக்கம் எல்லோரும் உட்காருங்க..’
எல்லோரும் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். 45 மாணவர்கள் இருக்கும்.
”முதல்நாள் எல்லார் பேரையும் கேட்டாலும் நினைவில் நிக்காது..
அதனால நான் கேள்வி கேக்கிறேன் பதில் சொல்லுங்க...”
‘ சரிங்க சார்...’
“ தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்...? “
‘ ............’
“ சரி இன்னோரு கேள்வி கேக்குறேன்..
கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சது யாரு ? ”
‘...........’
“ சரி பரவாயில்லை.. உங்களுக்கு தெரியாத கேள்வி நான் கேட்ட மாதிரி எனக்குத் பதில் தெரியாத கேள்வி நீங்க யாராவது கேளுங்க பார்ப்போம்...”
‘...........’ சிறிது அமைதிக்குப் பின், ஒரு மாணவன் எழுந்தான்.
“ தம்மம்பட்டியில் ஓடுற ஆறு பேரு என்னா சார்..? “
‘......ஙே......’
அன்றைக்கு தோற்க தொடங்கினேன். மாணவர்களிடம்.
* இன்றைக்கும் தான்
No comments:
Post a Comment