Sunday 9 June 2013

‘சமூக நீதி’ பற்றியெல்லாம்...


பள்ளிக்கூடம் முடிந்து வரும் குழந்தைக்கு
ஆடைமாற்றி, முகம் கழுவி
தேநீர் கொடுத்து விளையாடச் சொன்னால்..
அடம் பிடித்து ‘ஜாக்கிசான்’ பார்ப்பவர்களை
மிரட்டி டியூசனுக்கு அனுப்பிவிட்டு
கிடைக்கிற நேரத்தில்
நாடகம் பார்த்துக் கொண்டிருந்தால்...
டியூசன் முடிந்து வருபவர்களுக்கு
தோசை ஊற்றி தூங்க வைத்து
நாமும் தூங்கி...
... அதிகாலை அலாரம் வைத்து எழுந்து
குளிக்க வைத்து
சீருடை அணிவித்து
பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு
துவைத்துப் போட்டு
சமைத்து சாப்பிட்டு விட்டு
குழந்தைகளுக்காக காத்திருக்கையில்...
‘சமூக நீதி’ பற்றியெல்லாம்
யாராவது பேசிக் கொண்டால்
எனக்கொரு ஈ-மெயில் அனுப்புங்கள்
நேரமிருந்தால் திறந்து பார்க்கிறேன்.

No comments:

Post a Comment