Friday 7 June 2013

மூத்திரச் சுவர்

மூத்திரச் சுவர்





       ஆதிக்க திமிர்
சாதியைச் சொல்லி
சுவர்களை எழுப்பும்

       கொஞ்சம் இடித்தாலும்
கோபித்துக் கொண்டு
மலைகளில் குடியேறும்

       ஆண்டைகளை
மீண்டும் வரச் சொல்லி
அரசாங்கம் தூதனுப்பும்

       சுவர்களின் காயங்களுக்கு
சப்பு கொட்டிக் கொண்டே
சமரசம் நிறைவேறும்

       மீண்டும் எழும்பிய
மிச்ச சுவற்றில்
இங்கும் அங்கும்
மூத்திரம் பேய்ந்து குரைக்கும்
ஏதுமறியாத தெருநாய்.

( உத்தமப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சனையின் போது எழுதியது )

No comments:

Post a Comment