வெங்கடேஷ் ஆறுமுகம் முகநூலில் நடத்தும் போட்டி :
அன்பிற்கினிய நண்பர்களே கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆதரவு தந்தவர்களுக்கும் மிக்க நன்றி...
மொத்தம் 20 நபர்கள் கலந்து கொண்டாலும் இனி வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என எண்ணுகிறேன்... இந்த வார வெற்றியாளர்கள் பட்டியல் இதோ...
செல்வ குமார்
சஞ்சய்காந்தி
கோகுலன் நடராஜன்
கவி இளவல் தமிழ்
முதல்பக்கம் முக்கி
அஜ்னபி அல் ஸ்ரீலங்கி
சதீஷ் குமார்
செ.யோக்ஸ்
புங்கை முகிலன்
வெங்கட் கோகுலத்தில் சூரியன்...
இவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள்.. வாழ்த்துக்கள்... இவர்கள் அனைவருக்கும் சுஜாதாவின் புத்தகம் பரிசு.
இவர்களின் படைப்புகள் இவர்களுக்கு பரிசாக அளிக்கும் புத்தகம் பற்றிய விவரங்கள் நாளை என் முகனூல் பக்கத்தில் வெளியாகும்.
*
Selvakumar
சுஜாதா கற்பனைத்திறன் போட்டி எண்- 1
சுஜாதா கற்பனைத்திறன் போட்டி எண்- 1
” கண்ணகியே, கொல்லப்பட்ட ஃபேக் ஐ.டி கோவலன் யார் ? “
“ என் கணவன் ..”
“ கோவலனது ஃபேஸ்புக் ரிலேஷன்சிப் ஸ்டேட்டஸில் சிங்கிள் என்றுதானே போட்டிருக்கிறான்..”
“ ஐய்யகோ….அது மாதவியோடு சேட்டிங் செய்வதற்கான ஏற்பாடு..”
“ அது யார் மாதவி ? “
“ அவள் இந்த நோக்கியாவுக்கு சக்களத்தியாய் வந்த சைனா மொபைல்..”
“ சரி… கோவலன் உன் கணவன் தான் என்று எப்படி நம்புவது..? ”
’ இதோ ’வென கண்ணகி .வோட்டர்ஸ் ஐ.டி.யை வீசியெறிய…
“ பொன்செய் ’மார்க்’கின் தன்சொற்கேட்ட..
யானோ அரசன் யானே கள்வன்..”
No comments:
Post a Comment