Sunday 25 August 2013

மாரிமுத்துவின் ’ நீர்ச்சிறகு ‘

தேடிப் படிப்போம்...

நேற்று 04.08.2013 பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் கவிஞர். மாரிமுத்து அவர்களின் ‘ நீர்ச் சிறகுகள் ‘ என்ற நூல் குறித்து பேசினேன்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் கவிஞர். சுரதா, ” ’ நீர்ச் சிறகுகள் ‘ என்னும் தலைப்பே என்னைக் கவர்ந்தது, அவர் கவிதைகளுக்கு கொடுத்துள்ள தலைப்புகளே கவிதையாக இருக்கிறது” என வாழ்த்தியிருக்கிறார்.

இவர் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு என்பதை...முன்னுரையில் ‘ எங்கேப் போகிறோம் என்று தெரியாமலே தாயின் கையை பிடித்துக் கொண்டே நடக்கும் குழந்தை மாதிரி....’ என்று சொல்லியிருக்கும் அழகு பாராட்டப்பட வேண்டியது.

ஒரு சில கவிதைகள் உங்களுக்காக :

* பிரெய்லியை
தடவுவதுமாதிரி
உன்
பிஞ்சுமுகம்
தடவிப் பார்ப்பேன்...

*
பட்டதாரி என்னும் தலைப்பில்,

படிக்க வந்து
வெடித்து சிதறும்
வெடியானோம்...

* உமி என்னும் தலைப்பில்,

அனைத்து
அடுப்புகளும்
அறிக்கை விடப்போகிறதாம்
இனி
உமியாவது
உலைக்கு வேண்டுமென...

இவைகள் பானைகளை அறியத் தரும் பருக்கைகள் மட்டுமே...

வாய்ப்பிருந்தால் வாசியுங்களேன்...

நூலின் பெயர் : நீர்ச் சிறகுகள்
ஆசிரியர் : மாரிமுத்து
வெளியீடு : ரெங்கநாயகி பதிப்பகம், ‘சுந்தரம் பில்டிங்’, 81/47, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.
முதல் பதிப்பு : பிப்ரவரி 2004



No comments:

Post a Comment