Sunday 25 August 2013

நூலகர் தின விழா

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் 21.08.2013 அன்று மாலை நூலகர் தின விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட நூலக அலுவலர் திரு. சி.அசோகன் தலைமேற்க, வாசகர் வட்டத் தலைவர் திரு. சு. அசன்முகம்மது அவர்களும், வாசகர் வட்டத்துனைத் தலைவரான நானும் முன்னிலை பொறுப்பேற்றிருந்தோம்.

அரும்பாவூர் இலக்கியச் சாரல் அமைப்பின் செயலாளர் திரு. இ. தாஹீர் பாட்சா வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் புத்தகங்களால் வெற்றி பெற்றவர்கள் பற்றியும், உலக அறிஞர்களின் பொன்மொழிகள் பற்றியும் சிறப்பாக கூறி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

சிறப்புரையாற்றிய உளுந்தூர் பேட்டை விநாயகா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வரும், எனது பேராசிரியருமான திரு. இரா.நாராயணசாமி அவர்கள் கருத்தாழமிக்க உரை வழங்கினார். அவர் தனது உரையில் உலகின் மிகச் சிறந்த புத்தகங்கள் பற்றியும், புகழ் பெற்ற நூலகங்கள் பற்றியும், நூலகர்கள் பணியின் அவசியத்தையும், வாசகர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற நூலகர்களுக்கு பரிசு வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. ரெ. மகாலிங்கம் பாராட்டுரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்பம்சாக ‘ சேகுவேராவின் வாழ்வும் மரணமும் ‘ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

மைக்கில பேசறது நாந்தான்.......



No comments:

Post a Comment