Sunday 18 August 2013

நானும் சில பாடல்களும்....

நானும் சில பாடல்களும்....



நம்ம பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பாடல்களை பாடுகிறோம் :

உதாரணத்திற்கு கீழ்வரும் ஸ்டேட்டஸ்களில் .....

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...

* பொதுவாக இந்தப் பாடலை செயல் தொடங்குவதற்கு முன்னர்தான் பாட வேண்டும். இது சூளுரைக்கும் பாடல். ஆனால் பெரும்பாலும் செயல் முடிந்து வெற்றி பெற்ற பின்னர்தான் பாடுகிறோம்.

@

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

* இந்த பாட்டை ஹம்மிங் பன்னலைன்னா நீங்கள் வேறு ஏதோ கிரகத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்

@

மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்...
புது சுகமே... இனிக்கும் நன்னாளிது...

* இது எந்த உணர்வின்போது பாடுகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் மாததில் ஒரு நாள் தொற்றிக் கொள்ளும்.

@

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா...

* இறப்பின் துக்கத்தில் எழுதிய பாடல் இது. ஆனால் யாரைப் பற்றியும் யாரும் இப்படி கொள்வதாக எண்ண முடிவதில்லை.

சான்று :
1. சுனாமியில் இறந்தவர்கள்

2. சமீபத்தில் பத்ரிநாத்தில் இறந்தவர்கள்

* ஆனால் மனிதர்களுக்காக எழுதிய இந்தப் பாடலை பெரும்பாலும் பொருள்களை இழக்கும்போது பாடுகிறார்கள்

சான்று :

1. மணிபர்சிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் தவறிய போது

2. பிச்சைக்காரன் நாம் கொடுக்கும் சில்லரையை வாங்காதபோது

@

அமைதியான நதியினிலே ஓடும் .. ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...

* இது உண்மையிலே அமைதியா இருக்கும் போதுதான் வரும். இன்னொன்னு என்னான்னா... அமைதியாவும் + மகிச்சியாவும் இருந்தாத்தான் வரும்.

@

பருத்தி எடுக்கையிலே - என்னை
பலநாளும் பார்த்த மச்சான்..

* இது எந்தப் பருத்திக் காட்டுலயும் யாரும் பாடினதா கேட்டதில்லை. ஆனால் அந்த மூனாவது வரியை பல பெண்கள் பாடி கேட்டிருக்கேன்.

ஒருத்தி இருக்கையில
ஓடி வந்தால் ஆகாதோ..?
ஓடித்தான் வந்திருப்பேன் - நான்
ஒன்ன மட்டும் பார்த்திருந்தா.

@

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துப் புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்ன
வித்து வட்டிய கட்டிப் புட்டா

* நிறைய பேரு சோகமா இருக்கும்போது அடிக்கடி இதை பாடுவாங்க. ஆனால் இது அம்மாக்களோடு வாழமுடியாத பிள்ளைகள் பாட வேண்டியது. நான் இத எங்க அம்மாகிட்டியே பாடி இருக்கேன். அதிலேயும்...

ஊருல எங்க நாட்டுல எங்க
காட்டுங்க எங்க தாய்போல...

* ஹை பீக்....

@

என்ன சத்தம் இந்த நேரம்
இசையின் ஒளியாய்....

* காட்சிப்படி இது ஆளில்லாத ஆலப்புழா மாதிரி இடத்தில பாடனும். எனக்குத் தெரிஞ்சு இந்த பாட்டு டவுன்பஸ்ஸுலதான் பாடுவாங்க. ஏன்னா..நோக்கம் அப்பிடி.

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதே...

* இந்த வரி பாடும்போது திரும்பியாச்சுன்னா சிக்னல் கிடைச்சாச்சுன்னு அர்த்தம்

மங்கையவள் வாய்திறந்தால்
மல்லிகைப் பூ வாசம்

** பாட்டுப் பூராம் ஒரே கோஃட் வேர்டா இருக்கு. அப்பிடி பாஸாகும்.

_____________________________________

No comments:

Post a Comment